சினிமா

சேர்ந்து வாழ ஆசைப்படும் ஆர்த்தி! பேச வாய்ப்பு கொடுப்பாரா ஜெயம் ரவி?

Published by
பால முருகன்

சென்னை : ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருந்தாலும் ஆர்த்திக்கு அவருடன் இணைந்து வாழவேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கிறது. அதற்கு, ஒரு முக்கியமான உதாரணம் சொல்லலாம் என்றால் பரஸ்பர விவாகரத்துக்கு தனக்கு விருப்பம் இல்லை என ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.

அதைப்போல மற்றொரு, பக்கம் நடிகர் ஜெயம் ரவியும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் விவகாரத்துக்காகக் காத்திருப்பேன் அது தான் தன்னுடைய முடிவு என்று அவருடைய, முடிவில் உறுதியாக இருக்கிறார். இருப்பினும், தனிப்பட்ட முறையில், ஜெயம் ரவியுடன் பேசும் வாய்ப்புக்காக ஆர்த்தி காத்திருக்கிறார். ஆனால், ஜெயம் ரவி இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

ஜெயம் ரவி இப்படி இருப்பதற்கான காரணத்தைப் பற்றியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஆர்த்தி தன்னை மோசமாக நடத்தியதாகவும், வீட்டுப் பணியாளருக்குக் கொடுக்கும் மரியாதை கூட தனக்குக் கொடுக்கவில்லை எனவும் அவரை போலத் தான் அவருடைய அம்மாவும் என வெளிப்படையாகவே குற்றம்சாட்டிப் பேசியிருந்தார்.

இதனால் ஆர்த்தி மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து, இது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினை என்பதால் இதற்குப் பதில் அளிக்க விருப்பம் இல்லை எனவும் ஆர்த்தி கூறியிருந்தார். ஜெயம் ரவி ஆர்த்தி குறித்துப் பேசினாலும், ஆர்த்தி ஜெயம் ரவி குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். அதன் மூலமே அவர் ஜெயம் ரவி மீது பாசம் வைத்து இருக்கிறார் என்பது தெரிகிறது என ஒரு பக்கம் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இதன் காரணமாகவே, ரசிகர்கள் பலருடைய எதிர்பார்ப்புக்காக இருக்கும் விஷயம் இருவரும் மீண்டும் இணைந்து ஒன்றாக வாழ்வது தான். ஆனால், அது நடக்க வாய்ப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. ஏனென்றால், விவாகரத்து முடிவில் மட்டுமே உறுதியாக இருக்கும் ஜெயம் ரவி முழுவதுமாக சென்னையிலிருந்து வெளியேறி மும்பைக்குக் குடியேறவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி, இனிமேல் அவர் தன்னுடைய கவனத்தை முழுக்க முழுக்க சினிமாவில் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பேச வாய்ப்பு கேட்டுள்ள ஆர்த்திக்கு ஜெயம் ரவி வாய்ப்பு கொடுப்பாரா? அல்லது விவாகரத்து முடிவில் தான் உறுதியாக இருப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Published by
பால முருகன்

Recent Posts

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும்…

13 minutes ago

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

25 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

13 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

14 hours ago