Categories: சினிமா

முடிந்தது நிச்சயதார்த்தம்…ஆக்சன் கிங் மகளுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Published by
கெளதம்

ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது தெரியவந்துள்ளது. ஆம்… அண்மைய காலமாக, அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவின் காதல் குறித்த வதந்திகள் பரவி  வந்தது.

அதாவது, தம்பி ராமையாவின் மகனை காதலித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது, இவர்களது இருவரின் குடும்பத்தாரும் ஓகே சொல்லிவிட்டதால் அவர்கள் திருமணம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அந்த வகையில், இணையத்தில் பரவிய காதல் மற்றும் டேட்டிங் வதந்திகளும் உண்மையாகி உள்ளது. அட  மாங்க… இருவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் முன்னிலையில், இன்று ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, அது குறித்த தகவல் அவர்களே வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arjun daughter [File Image]

இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, தந்தையின் வழியை பின்பற்றி திரைத்துறையில் நுழைந்தார். அவர் 2013ல் விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் அவர் தனது தந்தை இயக்கிய மற்றும் எழுதிய கன்னட காதல் நாடகமான ‘பிரேமா பரஹா’ என்ற படத்தில் முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் இந்த படத்திற்கு ‘சொல்லிவிடவா’ என்று பெயரிடபட்டுள்ளது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் விஜய்க்கு சித்தப்பாவாக ஹரோல்ட் தாஸ் என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

10 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

10 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

11 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

12 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

13 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

13 hours ago