arjun daughter aishwarya marriage [File Image]
ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது தெரியவந்துள்ளது. ஆம்… அண்மைய காலமாக, அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவின் காதல் குறித்த வதந்திகள் பரவி வந்தது.
அதாவது, தம்பி ராமையாவின் மகனை காதலித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது, இவர்களது இருவரின் குடும்பத்தாரும் ஓகே சொல்லிவிட்டதால் அவர்கள் திருமணம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அந்த வகையில், இணையத்தில் பரவிய காதல் மற்றும் டேட்டிங் வதந்திகளும் உண்மையாகி உள்ளது. அட மாங்க… இருவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் முன்னிலையில், இன்று ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, அது குறித்த தகவல் அவர்களே வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, தந்தையின் வழியை பின்பற்றி திரைத்துறையில் நுழைந்தார். அவர் 2013ல் விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் அவர் தனது தந்தை இயக்கிய மற்றும் எழுதிய கன்னட காதல் நாடகமான ‘பிரேமா பரஹா’ என்ற படத்தில் முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் இந்த படத்திற்கு ‘சொல்லிவிடவா’ என்று பெயரிடபட்டுள்ளது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் விஜய்க்கு சித்தப்பாவாக ஹரோல்ட் தாஸ் என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…