தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!
இந்திய வானிலை மையம் (IMD) 2025 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதியில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் இயல்பிற்கு அதிகமாக வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பருவமழையின் இரண்டாம் பாதியில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பான மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.
வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியாவின் பல பகுதிகள், மத்திய இந்தியா மற்றும் தீபகற்ப இந்தியாவின் தென்மேற்குப் பகுதிகளில் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், இயல்பை விட குறைவான மழைப்பொழிவு இருக்கும். ஆகஸ்ட் 2025 இல் நாடு முழுவதும் மழைப்பொழிவு சாதாரண வரம்பில் இருக்கும்.
தமிழ்நாட்டில், 2024 ஆம் ஆண்டில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 8 வரை தென்மேற்கு பருவமழை இயல்பை விட 67% அதிகமாக பதிவாகியுள்ளது. நீலகிரியில் 1,015 மி.மீ., கோவையில் 754.2 மி.மீ., மற்றும் சென்னையில் 112% அதிக மழை (430.3 மி.மீ.) பதிவாகியுள்ளது.
இருப்பினும், சமீபத்திய தகவல்களின்படி, 2025 ஜூலை வரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 10-12% குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.