சினிமா

சிவாஜி படப்பிடிப்பில் நடந்த சம்பவம்! ரஜினி செயலை பார்த்து கண்கலங்கிய நடிகர்.?

Published by
செந்தில்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாதாரணமாக இருக்கும்போதும் சரி, படப்பிடிப்பின் போதும் சரி எப்பொழுது அமைதியாகவே இருப்பார். ஒருவருடம் கூட கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். நடிகர் என்பதை விட மிகவும் எளிமையான மனிதர் ரஜினிகாந்த் என்று அவருடன் நடித்த பல பிரபலங்களும் பேட்டிகளில் கூறிவது உண்டு.

அந்த வகையில், நடிகர் மூணார் ரமேஷ், ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சினிமாவில் நான் வியந்து பார்த்த ஒருவர் ரஜினிகாந்த். சிவாஜி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது, நான் ஒரு சீனில் நடித்தேன். அப்போது ஒரு கூட்டம் தலைவா தலைவா என்று பயங்கர சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.”

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…தனுஷ் குரலில் மிரட்ட வரும் முதல் பாடல்.!

“தலைவர் அவர்களின் முன்வந்து கையை காட்டியதும் அனைவரும் அமைதியாக ஆகிவிட்டார். அதைக் கேட்கும் பொழுது அப்பொழுது எனக்கு கண்களை விட்டது அவர் மேல் எப்படி ஒரு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று. படித்தவர்கள். படிக்காதவர்கள். பணக்காரர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல், அவர் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது. அது அவருக்கு நாளுக்கு நாள் கூலிக் கொண்டே தான் போகிறது”

“இதனால் அவரை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. மேலும், நான் பத்து வயதில் இருந்து ரஜினி ரசிகன். ரசிகன் என்பதை விட ரஜினி வெறியன். இன்று வரை அவருடைய ஒரு படத்தை கூட பார்க்க நான் தவறியதில்லை. அவரைப் பற்றி பேசாமல், அவருடைய வசனத்தை உச்சரிக்காமல் இத்தனை வருடங்களாக இருந்ததில்லை” என்று கூறினார்.

தளபதி 68 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்! என்ன தெரியுமா?

நடிகர் மூணார் ரமேஷ் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மூணார் ரமேஷ், குணச்சித்திரம் மற்றும் வில்லன்கள் கதாபாத்திரங்கள் நடித்து பெயர் பெற்றவர். குறிப்பாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் இப்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிக்காமல் இருக்கிறார்.

மேலும், நடிகர் ரஜினி காந்த் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் இயக்கத்தில், தலைவர் 170 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

56 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

1 hour ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago