Aadujeevitham box office [File Image]
Aadujeevitham Box Office: நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் ‘ஆடு ஜீவிதம்’ 2வது நாளில் ரூ.6.50 கோடி வசூலித்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் கடந்த வியாழன் (மார்ச் 28) அன்று திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் சிறப்பான வரவேற்பை பெற்று மலையாள பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜூக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.7.6 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் நாளில் உலக அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.16.7 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்றைய தினம் விடுமுறை என்பதால், ரூ.15 கோடி வசூல் செய்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக முழுவதும் மொத்தம் ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் தொடர் விடுமுறை என்பதால், இன்னும் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…