Categories: சினிமா

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தல அறிக்கை வெளியீட்டு இருக்கலாம்! நடிகர் ரஞ்சித் கருத்து!

Published by
பால முருகன்

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆனால், சினிமாவில் பல படங்களில் கேப்டன் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்த வடிவேலு கேப்டன் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை சமூக வலைத்தளங்களில் கூட அவர் இரங்கலை தெரிவிக்கவில்லை. வடிவேலு அஞ்சலி செலுத்தாது ஏன் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், பிரபல நடிகரான ரஞ்சித் “வடிவேலு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராதது ஏன் என கேள்விக்கு பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் இது பற்றி பேசுகையில் ‘வடிவேலு வராததைப் பற்றி நான் அப்புறம் சொல்கிறேன் முதலில் கேப்டன் விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர் ஒரு நடிகர் மறைந்து விட்டால் இவ்வளவு கூட்டம் வரும் என்று சிலரும் நினைக்கலாம். ஆனால் அவர் நடிகராக மட்டுமின்றி ஒரு நல்ல மனிதராகவும் பலருடைய மனதில் இடம் பிடித்துள்ளார் .

பட்டினி போடுவது தவறு! பசியை போக்க ரயிலை நிறுத்திய கேப்டன் விஜயகாந்த்!

அதன் காரணமாக தான் அவருடைய இறப்புக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. அவருடைய மறைவு எனக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. வடிவேலு அவருடைய மறைவிற்கு வராததற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை அதை பற்றி நான் பேச வில்லை ஏனென்றால், அதனை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் வரவில்லை என்றாலும் கூட சமூக வலைத்தளங்களின் மூலம் ஒரு அறிக்கையை ஒன்றாவது வெளியிட்டு இருக்கலாம்.

அறிக்கையின் மூலம் அவர் தனது இரங்கலை தெரிவித்து இருக்கலாம். கட்டாயமாக வாழ்க்கையில் யாரும் யாருக்கும் எதிரி கிடையாது. கட்டாயமாக அவர் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை என்றாலும் கூட அறிக்கை வெளியீட்டு இருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து” எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

34 minutes ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

47 minutes ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

2 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

3 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

3 hours ago