நகைசுவை நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், சமூகத்தின் மீதும், இயற்கை வளங்களின் மீது அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார்.
நடிகர் விவேக்கை பொறுத்தவரையில், மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை மாநகராட்சி, மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனை பாராட்டும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சென்னை மாநகராட்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும். இருக்கும் அரசு மரங்களை பாதுகாப்பதற்கும் இனி புதிதாக மரம் நடுவதற்கும் வாழ்த்துக்கள். மாநகராட்சி கமிஷனர் திரு.G.பிரகாஷ் IAS அவர்களுக்கு என் இதய பூர்வ நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…