[Image source : freewalldownload]
தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் சந்தித்தார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அதேவேளையில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கங்களாக மாற்றி தனது ரசிகர் மன்ற நிவாகிகள் உதவியுடன், ரசிகர்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
ஏற்கனவே மக்கள் இயக்கங்கள் சார்பில், விலையில்லா உணவகம் என ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது, குருதியகம் மூலம் இரத்த தானம் செய்வது, விழியாகம் கண்தானம் உள்ளிட்டவை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட நபர்களை விஜய் , தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களை பாராட்டியுள்ளார். மேலும், இம்மாதிரியான நலத்திட்டங்கள் செய்வதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் தருகிறேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார் நடிகர் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் நின்று கணிசமான அளவில் வெற்றிகளை பெற்று உள்ளாட்சி உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். வெற்றி பெற்றவர்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…