டாஸ்மார்க் மதுபானங்களுக்கு எதிராக குரலெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர் நந்தினி. இவருக்கு துணையாக இவரது தந்தை ஆனந்தும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2014- இவர் மீது தொடரப்பட்ட விசாரணைக்காக நந்தினியும் அவரது தந்தையும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில், நந்தினி நீதிபதியிடம் டாஸ்மாக் மூலமாக போதைப்பொருள் விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இது போன்ற கேள்விகளை இனி எழுப்ப மாட்டோம் என்று கையெழுத்திடுமாறு நீதிபதி கூறியுள்ளார். அதற்க்கு நந்தினி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி, இருவரையும் ஜூன்-9ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. இந்நிலையில், இவருக்கு ஜூலை 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், “அன்பு சகோதரி, உங்கள் நல் நோக்கம் நிறைவேறட்டும். உங்கள் வாழ்வில் அமைதி பூக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…