Mahima Nambiar [file image]
2010ம் ஆண்டு திரையுலகில் நுழைந்த நடிகை மஹிமா நம்பியார், சாட்டை திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த சமயத்தில் மஹிமா நம்பியாரின் கதாபாத்திரம் சிறிது பேசப்பட்டிருந்தாலும், அதன் பிறகு பெரிதாக எதுவும் பேசப்படவில்லை.
பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23 என சில திரைப்படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் திரைப்படத்திலும், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அசுரகுரு படத்திலும் ஜோடியாக நடித்தார். இதன் பிறகும் சரியாக படப்பிடிப்புகள் அவருக்கு வரவில்லை.
கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அவர் போட்டோ சூட் எடுத்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரோஸ் நிற மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. இதைத்தொடர்ந்து தற்பொழுதும் சில கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் மேலே பச்சை நிறத்திலும் கீழே ரோஸ் நிறத்திலும் இருக்கமான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது பார்வை அனைவரும் கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கண்களாலேயே கொள்கிறார், தேவதை என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மஹிமா நம்பியார் ‘நாடு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…