Raashi Khanna [File Image]
Raashii Khanna : அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருக்கும் எல்லா நடிகைகளுக்கும் ஒவ்வொரு கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புவது உண்டு. ஒரு சில நடிகைகள் சைக்கோ த்ரில்லர் படங்களில் நடிக்க விரும்புவது உண்டு ஒரு சிலர் சாகச காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க விருப்பப்படுவது உண்டு. ஒரு சில நடிகைகள் பாகுபலி போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசைப்படுவது உண்டு. இதனை அந்த நடிகைகளே தெரிவிப்பதையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
அந்த வகையில், சமீபத்தில் நடிகை ராஷி கண்ணாவும் தனக்கு எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பொதுவாகவே நடிக்க பல படங்களில் இருந்து வாய்ப்பு வருகிறது. ஆனால், நம்மளுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்படக்கூடிய வகையில் இருக்கவேண்டுமோ அதே அளவிற்கு அருமையான கதாபாத்திரத்தை மட்டும் தான் தேர்வு செய்து நடிக்கவேண்டும்.
எனக்கு இந்த கதை தான் பிடிக்கும் அந்த கதை தான் பிடிக்கும் என்று ஒன்றும் இல்லை என்னை பொறுத்தவரை கதை நன்றாக இருக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் நான் நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரம் வரலாற்று கதைகளை வைத்து உருவாகும் படங்களில் நடிக்கவேண்டும் என்று தான். பாகுபலி போன்ற படங்கள் உருவாகி அது போல ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தால் அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க காத்து இருக்கிறேன்.
நான் இப்போது அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரமும் நன்றாக இருக்கிறது நானும் நன்றாக நடித்து இருக்கிறேன். கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்” எனவும் ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். மேலும் அரண்மனை 4 படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…