aayirathil oruvan saroja devi [file image]
எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமயத்தில் அவருக்கு ஜோடியாக பல படங்களில் நடிகை சரோஜாதேவி தான் நடித்து வந்தார். பிறகு ஜெயலலிதா அறிமுகம் ஆன பிறகு எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்களில் தனக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வையுங்கள் கூறியதாக பலர் கூறுவதை நாம் பார்த்திருப்போம். எம்.ஜி.ஆர். சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த படங்கள் எந்த அளவிற்கு வெற்றியை பெற்றதோ அதைபோலவே அவர் ஜெயலலிதாவுடன் நடித்த படங்கள் கூட பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
மேலும், ஒரு சில படங்களில் நடிக்கும் போதே அந்த படத்தின் இயக்குனர் சரோஜா தேவி தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என எழுதி வைத்து அவர் நடிக்கவிருந்த பிறகு எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தால் ஜெயலலிதாவை மாற்றி நடிக்க வைத்த சில படங்களும் இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டிய படம் என்றால் இயக்குனர் பி.ஆர். பந்துலு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம்.
இந்த திரைப்படத்தில் முதல் முதலாக ஜெயலலிதா நடித்த பூங்கொடி கதாபாத்திரத்தில் முதலில் நடிகை சரோஜா தேவிதான் நடிக்கவிருந்தாராம். பிறகு எம்.ஜி.ஆர் அவர் வேண்டாம் அவருக்கு பதிலாக ஜெயலலிதாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும். அவர் சுறு சுறுப்பாக இருக்கிறார். அவருடைய நடனமும் நடிப்பும் அருமையாக இருக்கிறது அவர் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளாராம்.
அது மட்டுமின்றி, இதற்கு முன்பு ஜெயலலிதா நடித்த படங்களில் சிலவற்றை போட்டு பார்த்து இவரையே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க வையுங்கள் என படக்குழுவிடம் கூறிவிட்டாராம். பிறகு எம்.ஜி.ஆர் இவ்வளவு சொன்ன காரணத்தால் பிறகு ஜெயலலிதாவை நடிக்க படக்குழு ஒப்பந்தம் செய்துவிட்டதாம். படத்தில் ஜெயலலிதாவும் அருமையாக நடனம் ஆடி இருப்பார் அதைப்போல அருமையாக நடித்தும் இருப்பார்.
இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் -இராமமூர்த்தி இணைந்து இசையமைத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசித் திரைப்படம் இது தான். படத்தில் இடம்பெற்றிருந்த “ஆடாமல் ஆடுகிறேன்”, “அதோ அந்தப் பறவை போல”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்”, “ஏன் என்ற கேள்வி” பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
குறிப்பாக “ஆடாமல் ஆடுகிறேன்” பாடலில் ஜெயலலிதா ஆடிய நடனம் இன்றுவரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. அந்த அளவிற்கு அருமையாக ஒரு நடனத்தை ஆடி கலக்கி இருப்பார். ஜெயலலிதா ஒரு பக்கம் நடனத்திலும் நடிப்பிலும் மிரட்டி இருந்தால் மற்றோரு பக்கம் எம்.ஜி. ஆர். தனது ஸ்டைலிலேயே அசத்தி இருப்பார்.
இந்த திரைப்படத்தில் எம். என். நம்பியார் , நாகேஷ், ஆர். எஸ். மனோக, மாதவி கிருஷ்ணன், எஸ். வி. இராமதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் அந்த சமயமே பெரிய பட்ஜெட்டில் உருவானது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்துமே அருமையாக காமித்து இருப்பார்கள். குறிப்பாக கப்பலில் வரும் சண்டைக்காட்சிகள் அந்த சமயம் பார்ப்பதற்கு மிகவும் புதிதாக இருந்தது.
படத்தின் ஒளிப்பதிவாளர் வி. ராமமூர்த்தி மக்களுக்கு காட்சிகளை பார்க்கும் போது புதிதாக இருக்கவேண்டும் என்பதற்காக தனது கடின உழைப்பை போட்டிருப்பார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போதே தெரியும். மேலும், இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக தன்னுடைய படங்களில் ஜெயலலிதாவை கமிட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…