ராஜ்ய சபா சீட் குறித்து இ.பி.எஸ் சொன்னது என்ன..? பிரேமலதா சொன்ன பதில்!

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது 2026இல் அதற்கான சாத்தியம் உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

premalatha vijayakanth edappadi palanisamy

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே தங்கள் அரசியல் நகர்வுகள் இருக்கும் எனவும்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026இல் மாநிலங்களவை ராஜ்ய சபாசீட் தேமுதிகவுக்கு உறுதியாக வழங்கப்படும் என்று உறுதியளித்த தகவலை பற்றியும் கூறியுள்ளார். ஆனால், முன்னர் 2025இல் சீட் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது இப்போது 2026ஆக மாற்றப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் ” 2026ல் மாநிலங்களவை சீட் உறுதியாக தருவதாக எடப்பாடி பழனிசாமி என்னிடம் கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். 2025ல் தருவதாக சொன்னதை 2026 என்று அறிவித்துள்ளார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். எனவே, அவர்கள் சொல்லிருக்கிறார்கள். காத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். பொறுத்தார் பூமி ஆள்வார்” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, பிரேமலதா தெளிவான பதிலை சொல்லாமல் “தவெகவுடன் கூட்டணி என்றால், அதை விஜய்யிடமே கேட்க வேண்டும்” என்று அவர் பதிலளித்தார். தேமுதிக இது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், விஜய்யின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

அதே சமயம் 2026-இல் கூட்டணி ஆட்சி அமைந்தால், அது மக்களுக்கு நன்மை அளிக்கும் எனவும், கூட்டணி ஆட்சியில் இருந்தால், ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட முடியும் என்று அவர் கூறினார். தேமுதிகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள், 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு திட்டமிடப்படும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்