Categories: சினிமா

கடைசி நிமிடத்தில் கேப்டன் சொன்னது இதுதான் -பெசன்ட் ரவி எமோஷனல்!

Published by
பால முருகன்

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.  அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நேரில் சென்று பல பிரபலங்களும் அஞ்சலியை செலுத்தி  வருகிறார்கள்.

அந்த வகையில்,  விஜயகாந்துடன் பல படங்களில் நடித்த நடிகர் பெசன்ட் ரவி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பெசன்ட் ரவி ” கேப்டன் இறப்பை பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பலருக்கும் நல்லது செய்த அந்த மனிதர் இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம். அவர் செய்த உதவிகள் அவர் சாப்பாடு போட்ட விஷயம் எல்லாம் கண்ணுக்குள் நினைவுக்கு வருகிறது.

தங்கத்தை உருகினாலும் தங்கம் தங்கம் தான். அந்த மாதிரி மனம் கொண்ட ஒரு மனிதர் தான் விஜயகாந்த். அவர் உடல் நலம் சரியில்லாமல் போகும் சமயத்தில் ஒரு விஷயம் செய்தார். அது என்னவென்றால், அவருடன் படங்களில் நடித்து அவருக்கு பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஒன்றாக அழைத்து கடைசியாக அவர்களுடன் பேசவேண்டும் என்று நினைத்தார். அப்படி தான் என்னையும் ஒரு முறை நேரில் அழைத்தார்.

விஜயகாந்த் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்! ரஜினிகாந்த் பேச்சு! 

அந்த நேரம் தன்னுடைய பணியாற்றிய பிரபலங்கள் அனைவருடன் அமர்ந்து அவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். கூட நடித்தவர்கள் மட்டுமில்லை அவருடன் சண்டைபோட்டவர்கள் அனைவரையுமே அந்த நாள் வர கூறி அவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்திலும் அவருக்கு அனைவரையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எல்லாரும் சொல்கிறார்கள் விஜயகாந்த் உணவு கொடுத்தார் என்று அவர் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். என்றுமே கேப்டனை மறக்க மாட்டேன்” எனவும் பெசன்ட் ரவி உருக்கத்துடன் பேசியுள்ளார்.

Recent Posts

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

44 minutes ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

1 hour ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

2 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

2 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

3 hours ago

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

10 hours ago