ஆஹா! தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் விஜயின் மகன்!

Published by
பால முருகன்

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் . பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை அவர் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி படித்து வந்தார்.

படித்து முடித்ததும் ஜேசன் சஞ்சய் “trigger” எனும் குறும்படம் ஒன்றையும் இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் நடிப்பதன் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாகவும் புதிய தகவல் பரவியது. ஆனால், தற்போது அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ” ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வெற்றி மனநிறைவு நிறைந்த வாழ்க்கை அவருக்கு அமைய வாழ்த்துகிறோம்” என அறிவித்துள்ளார்கள்.

தற்போது நடிகர் விஜய் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய படங்களின் வசூல் பல சாதனைகளை படைத்தது தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக இருக்கிறார் எனவே அவரைப்போலவே அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தொடர்ச்சியாக நல்ல படங்களை இயக்கி வெற்றியை காண வேண்டும் என விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்திற்கான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago