சினிமா

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?

Published by
பால முருகன்

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி வந்தார். துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக 70 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கினார். இந்த நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார்.

அதன்படி, அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அவர் அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூற அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போன காரணத்தால் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போதே அவர் அஜித் கிட்ட ஒரு கதை கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனவே, அந்த கதை தான் அஜித்தின் 63-வது திரைப்படமாக உருவாகலாம் என தெரிகிறது. அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு தனது 63-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் ஒரு தகவல் என்னவென்றால், அஜித் சம்பளம் தான்.

ஏனென்றால், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்திற்கு சம்பளமாக 163 கோடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு 150 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில்,தற்போது அஜித் சம்பளத்தை உயர்த்தி கேட்டிருக்கிறாராம்.

சம்பளத்தை உயர்த்தி கேட்டதும் படத்தை தயாரிக்கும்   ஆர்எஸ்இன்ஃபோ டெயின்மென்ட்  உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளதாம். எனவே, இந்த படத்திற்காக அஜித்திற்கு சம்பளமாக 163 கோடி கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கான தகவல் ஒரு பக்கம் பரவி வரும் நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பேட்டி ஒன்றில் ” இப்போது பரவும் தகவல் உண்மையாக இருந்தாலும் தற்போது படம் பேச்சுவார்தையில் தான் இருக்கிறது. முடிந்த பிறகு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

22 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago