rajinikanth and ajith file image]
அஜித்குமார் : ஆரம்ப காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து 2000களில் பல தோல்வி படங்கள் கொடுத்து பிறகு தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சமயத்தில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் விஷ்ணுவரதன் இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படம் தான்.
ஜி, பரமசிவன், திருப்பதி, ஆழ்வார், கிரீடம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இடையில் வரலாறு படம் மட்டும் ஹிட் வரிசையில் இணைந்து இருந்தது. மீதி படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வந்த காரணத்தால் அஜித் அந்த சமயம் மிகவும் வேதனை அடைந்தாராம்.
அப்போது தான் ரஜினிகாந்த் அஜித்திடம் உங்களுக்கு வில்லத்தனமான நடிப்பு நன்றாக வருகிறது. நீங்கள் என்னுடைய பில்லா படத்தினை ஏன் ரீமேக் செய்து அதில் நடிக்க கூடாது? கண்டிப்பாக நீங்கள் பில்லா படத்தின் ரீமேக்கில் நடியுங்கள் என்று ரஜினிகாந்த் கூறினாராம். ரஜினி சொன்ன அந்த வார்த்தையை சரியாக கவனித்துக்கொண்டு அஜித் அதன்பிறகு தான் பில்லா படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவெடுத்தாராம்.
முன்னதாக, பில்லா படத்தில் நடித்த காரணம் பற்றி பேட்டியில் பேசிய அஜித்குமார் பில்லா படம் செய்ய காரணமே ரஜினிகாந்த் தான். அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அந்த படம் தான். எனவே, நான் ரஜினியின் தீவிர ரசிகன் அவருக்காக தான் பில்லா படத்தில் நடிக்க நான் சம்மதம் தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…