Categories: சினிமா

கேப்டன் விஜயகாந்த் மறைவு! நாளை படப்பிடிப்புகள் ரத்து!

Published by
பால முருகன்

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதைப்போல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன், அருண் விஜய், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ரேகா, குஷ்பு, நமீதா உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்! 

இந்த நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நாளை (டிசம்பர் 29) ஆம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, விஜயகாந்தின் இறுதி பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, நாளை தமிழகத்தில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது.  மேலும், விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதை உடன் நடைபெறுகிறது. விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்க தமிழக அரசு உத்தரவு கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

1 hour ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago