மாநாடு திரைப்படம் வெளியாகும் இந்த நேரத்தில் திரையரங்கு பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறுவது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழக அரசு அண்மையில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டதை திரையரங்கு நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் என்பது போல அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த வாரம் தான் மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது. பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறுவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தனது மனக்குமுறலை டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
சில வாரங்களுக்கு முன்னர், தீபாவளியை முன்னிட்டு , சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. சிம்புவை விட ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் என உலகமே அறியும். அதேபோல, அண்ணாத்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 30 கோடியை தாண்டி இருந்தது.
திரையரங்கு பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அண்ணாத்த ரிலீஸ் அப்போ கூறியிருந்தால், பெரும்பாலான ரசிகர்கள், திரையரங்கு பார்வையாளர்கள் தடுப்பூசி போட்டிருப்பார்கள். ஆனால், தற்போது, சிம்புவின் மாநாடு படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இந்த அறிவிப்பு ஏன் வந்துள்ளது என ரசிகர்கள் இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…