Annaatthe [file image]
ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, ஜெகபதிபாபு, குஷ்பூ, சூரி, யோகி பாபு, அஞ்சலி நாயர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் டிரைலர், டீசர் என அனைத்தையும் வெளியிட்டு இந்த திரைப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை பட குழு அதிகமாக்கி இருந்தது. இதனால், இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்ற காரணத்தினால் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.
அண்ணாத்த திரைப்படம் இதே தினத்தில் தான் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. எனவே, படம் வெளியாகி இன்றுடன் 2-ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், படத்தின் வசூல் மற்றும் படம் எத்தனை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்த அண்ணாத்த திரைப்படம் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், வசூல் ரீதியாக 200 கோடி வரை மட்டுமே உலகம் முழுவதும் செய்திருந்தது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 90 கோடியும், கர்நாடகாவில் 15 கோடி எனவும், வெளிநாடுகளில் 40 கோடி என வசூல் செய்தது.இருந்தாலும் படம் சரியாக இல்லாத காரணத்தால் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…
சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…