Categories: சினிமா

‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் இருந்து அதிரடி நீக்கம்.!

Published by
கெளதம்

நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா நடிப்பில்  கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கிருந்தது.

அதன்படி, கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். படத்தில் நடிகை நயன்தாரா சமையல் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் கூறி மும்ப்பை காவல் நிலையத்தில் நயன்தாரா மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, நடிகை நயன்தாரா மீது மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின்படி, “வேண்டும் என்றே இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய்யா இது? லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என ZEE நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது, இப்படியான எந்த சர்ச்சை மற்றும் கண்டனங்கள்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னபூரணி

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

12 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

13 hours ago