முக்கியச் செய்திகள்

Balachander : இளையராஜாவை ஓரங்கட்ட பாலச்சந்தர் போட்ட மாஸ்டர் பிளான் தான் ஏ.ஆர்.ரஹ்மான்! வெளியான டாப் சீக்ரெட்!

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் இளையராஜா 1970 காலகட்டத்தில் இருந்து 90 வரை தமிழில் வெளியான பல படங்கள் அவருடைய இசையில் தான் வெளியானது. அந்த அளவிற்கு அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் மாற்று படங்கள் வெற்றிபெற்றுவிடும். ஒரு கட்டத்தில் இளையராஜா இசையமைத்தால் தான் இந்த படம் வெற்றிபெறும் என்கிற அளவிற்கு கூட இருந்தது. அதைப்போல சில படங்கள் சரியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட அந்த படத்தில் இருக்கும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகிவிடும்.

அப்போது இருந்த பல பெரிய இயக்குனர்களும் சரி சிறிய இயக்குனர்களும் சரி இளையராஜாவின் ஸ்டூடியோவில் தான் இருப்பார்கள் என்றே கூறலாம்.  இப்படி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு எதிராக பல இசையமைப்பாளர்கள் இசையமைத்து கொண்டிருந்தாலும் கூட இளையராஜாவின் இசையில் வெளியாகும் படங்கள் தான் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால், 1992-ஆம் ஆண்டுக்கு பிறகு இளையராஜாவின் இசை குறைய தொடங்கியது அதற்கு முக்கிய காரணம் யார் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் தான். இளையராஜாவிடம் கீபோர்ட் வசிப்பவராக இருந்த ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இதுவரை இல்லாத வகையில் புதுவிதமான ஒளியை கொடுத்ததால் ரோஜா படத்துடன் சேர்த்து பாடல்களும் கொண்டாடப்பட்டது.

இதனால் இளையராஜாவிடம் இசைக்காக சென்ற பல இயக்குனர்களும் அப்படியே திரும்பி ஏ.ஆர்.ரஹ்மான் இடம் சென்றனர். ரோஜா படத்தில் ஹிட் கொடுக்க தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்ததாக தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வந்தார். இந்நிலையில், இளையராஜாவை ஓரங்கட்ட இயக்குனர் கே.பாலச்சந்தர் போட்ட மாஸ்டர் பிளான் தான் ரஹ்மான்தானாம்.

ஏனென்றால், அந்த சமயம் இளையராஜா தொடர்ச்சியாக படங்களுக்கு இசையமைத்து கொடுத்துக்கொண்டு தன்னைவிட்டு ஆள் இல்லை இங்கே தான் வரவேண்டும் என இருந்த காரணத்தால் இயக்குனர் கே.பாலசந்தர் ரோஜா படத்தை தயாரித்து அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தாராம்.

குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவிடம் பணிபுரிந்தவர் தான் எனவே அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து இளையராஜாவை ஓரம் கட்ட வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டு தான் பாலசந்தர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் எனவும் மருத்துவரும், சினிமா ஆய்வாளருமான காந்தராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ரோஜா படத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago