#image_title
Bayilvan Ranganathan : ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் பானுபிரியாவை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பேசுவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணின் கணவர் கிருஷ்ண வம்சி நடிகை பானுபிரியாவை துரத்தி துரத்தி காதலித்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவும் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை பானுபிரியா முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருந்த காலத்திலே அதாவது 1998 காலகட்டத்திலே ஆதர்ஷ் கௌஷல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2005-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டாராம்.
பானுபிரியா திருமணம் செய்துகொண்ட காலத்தில் சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தாராம். அதன்பிறகு விவாகரத்து செய்து கொண்ட பிறகு தான் மீண்டும் படங்களில் நடிக்க வந்தாராம். அப்படி திரும்பி வந்த பிறகு பானுபிரியாவை ரம்யா கிருஷ்ணின் கணவரும், இயக்குனருமான கிருஷ்ண வம்சி பானுபிரியாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டாராம்.
கிருஷ்ண வம்சி நடிகை ரம்யா கிருஷ்ணனை கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே ரம்யா கிருஷ்ணனை அவர் திருமணம் செய்துகொண்டு இருந்தாலும் கூட பானுபிரியாவை கிருஷ்ண வம்சி இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள நினைத்தாராம். இருந்தாலும் நடிகை பானுப்ரியா அவர் மீது ஆர்வம் காட்டவில்லையாம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…