Bhuvaneswari actress boys [file image]
Bhuvaneswari கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை புவனேஸ்வரி. இவருடைய கண்கள் பார்ப்பதற்கு பூனைக்கண்கள் போல் இருப்பதால் அந்த சமயமே இவருக்கு பூனைக்கண்ணு புவனேஸ்வரி என்ற பெயரும் கிடைத்தது. இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் இவருக்கு ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.
ஆனால் பாய்ஸ் படத்தில் நடிக்கவே முதலில் நடிகை புவனேஸ்வரி யோசித்தாராம். அந்த அளவிற்கு பயந்தாராம். ஏனென்றால் இந்த படத்திற்கு முன்பு அவர் பல கவர்ச்சியான படங்களில் நடித்திருக்கலாம் ஆனால் பாய்ஸ் படத்தின் இந்த கதாபாத்திரத்தை போல ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்ததே இல்லை. 5 பசங்க ஒரு ரூம் எப்படி சரியாக வரும் என இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் நம்மளை எப்படி பார்ப்பார்கள் என யோசித்தாராம்.
ஆனால் இயக்குனர் ஷங்கர் ஐந்து பேரில் ஒருவரின் விரல் கூட உங்களுடைய மேல் படாது அந்த மாதிரி எந்த காட்சியும் படத்தில் இல்லை நீங்கள் தைரியமாக இந்த கதாபாத்திரத்தை செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும் என்று கூறினாராம். ஷங்கரே இப்படி கூறியவுடன் புவனேஸ்வரி இந்த கதாபாத்திரத்தில் நாம் நடிப்போம் என்று முடிவெடுத்தாராம். அதேபோலவே அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றிபெற்று மக்களுக்கு அவருடைய பெயரை தெரிய வைத்தது.
அது ஒரு புறம் இருந்தாலும், கதாபாத்திரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் அவருடைய கதாபாத்திரத்தை விமர்சிக்க தொடங்கியதால் எதிர்மறையான விமர்சனங்களில் புவனேஸ்வரி சிக்கினார். இதனால் புவனேஸ்வரி சற்று வேதனையும் அடைந்தாராம். ஷங்கர் சொல்லி நடித்தோம் இப்படி ஆகிவிட்டது என்று வேதனைப்பட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…