சினிமா

பிக் பாஸ் 7 : நீ வெளியே போனா நானும் போயிருவேன்! மாயா எடுத்த அதிரடி முடிவு?

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில், அடிக்கடி சில சண்டைகள் நடைபெற்று அது பெரியதாக வெடிக்காமல் அமைதியாகவே முடிந்து விடுகிறது. மற்ற சீசன்கள் என்றாலே இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுகுள்ளே சண்டைபோட்டு கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுவார்கள்.

வழக்கமாக நடைபெறும் பிக் பாஸ் சீசனை விட இந்த சீசன் மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த 7-வது சீசனில் எதுவுமே நடக்கவில்லை. மேலும், முதல் வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

அவரை தொடர்ந்து அடுத்ததாக எழுத்தாளர் பவா செல்லத்துரை தன்னால் இனிமேல் ஒரு நாள் கூட இந்த வீட்டில் இருக்க முடியாது தன்னை இந்த வீட்டை விட்டு வெளியே விடுங்கள் என தெரிவித்திருந்தார். எனவே, உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியது.

இந்த நிலையில், ஏற்கனவே, இந்த வாரம் வீட்டில் இருந்து பவா செல்லத்துரை வெளியேறியுள்ள காரணத்தால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று விஜய் தொலைக்காட்சி அறிவித்து இருந்தது. ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பது வீட்டில் இருக்கும் போட்டியளர்களுக்கு தெரியாது. அவர்கள் இந்த வாரமும் எலிமினேஷன் இருப்பதாகவே நினைத்து வருகிறார்கள்.

இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் பிரதீப், மாயா, விஷ்ணு, அக்‌ஷயா, ஜோவிகா, விசித்ரா, பூர்ணிமா ஆகியோர் பெயர் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயா பூர்ணிமா விடம் எலிமினேஷன் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். பூர்ணா முதலில் எனக்கு எப்போதும் வீட்டை விட்டு போவேன் என்று தோனியது இல்லை இந்த முறை இது தான் என்னுடைய கடைசி வாரம் என்று தோணுவதாக கூறுகிறார்.

அதற்கு மாயா நீ இந்த வீட்டை விட்டு வெளியே சென்றால் நானும் சென்றுவிடுவேன் இவர்கள் கூட எல்லாம் நம்மளால இருக்கவே முடியாது என்று கூறுகிறார். மேலும் தொடர்ந்து பேசும் மாயா அடுத்த வாரம் ஐஷு மட்டும் கேப்டன் ஆகிவிட்டால் என்றால் ஜோவிகா மற்றும் யுகேந்திரன், ஆகிய இரண்டு பேரையும் வச்சு செய்ய போறார் என்று கூறுகிறார்” இத்துடன் ப்ரோமோவும் முடிகிறது.

எனவே, என்னவெல்லாம் மாயா பூர்ணாவிடம் பேசினார் என்பதற்கான முழு விவரம் இன்று நடைபெறும் எபிசோடில் தான் தெரிய வரும். மேலும், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதை கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு பயத்தை கொடுத்துவிட்டு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

7 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

8 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

8 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

10 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

10 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

10 hours ago