அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 0 ரன்னில் வெளியேறினார்.

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இன்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என ஆசைப்பட்ட இளைஞன் சாய் சுதர்சன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால், பிரைடன் கார்ஸ் வீசிய 25-வது ஓவரில் ராகுல் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்த ஓவரிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் வந்த வேகத்தில் 0 ரன்னுக்கு நடையை கட்டினார். நம்பர் 3 பேட்டராக சாய் சுதர்சன்பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது, ஜோமி ஸ்மித் கேட்ச் பிடித்து அவுட்டானது, அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றதையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன், அற்புதமான ஃபார்ம் கொண்டிருந்த போதிலும் ஹெடிங்லியில் நடந்த இன்றைய முதல் போட்டியில் ஸ்விங்கிங் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சுதர்சன் திணறினார். இந்த ஆரம்ப பின்னடைவு இரண்டாவது இன்னிங்ஸில் தனது திறமையை நிரூபிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம், 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் டெஸ்ட் இன்னிங்ஸிலேயே டக் அவுட் ஆன முதல் இந்திய வீரர் சாய் சுதர்சன் என்ற தேவையற்ற பட்டியலில் இணைந்தார். 2011 ஆம் ஆண்டு உமேஷ் யாதவுக்குப் பிறகு அந்த கதியை சந்தித்த முதல் இந்தியர் இவர்தான்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025