இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (101) சதம் அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் 42 ரன்கள் அடிக்க, சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
அதன் பின் கேப்டன் கில்( 127) சதம் அடிக்க, துணை கேப்டன் பண்ட் (65) அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில், பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் – 2,
ப்ரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் மிரட்டலாக விளையாடி சதம் விளாசியுள்ளார்.
தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் – ராகுல் கூட்டணி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. அதன்பின் தொடர்ந்து இரண்டு விக்கெட்டை இந்தியா பறிகொடுத்ததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கில் அரைசதம் விளாசி கெத்து காட்டியுள்ளார்.
அதே நேரம், இங்கிலாந்து தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்திருக்கிறது. கேப்டனான முதல் இன்னிங்ஸிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார். இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வாலை தொடர்ந்து கில்லும் சதம் விளாசியதால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
அந்த வகையில், லீட்ஸ் மைதானத்தில் 39 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் 50+ ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். நேற்றைய போட்டியில் ராகுல் – ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம், 1986-ம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் கவாஸ்கர் – ஸ்ரீகாந்த் ஜோடி (64 ரன்கள்) படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது.
கில் சாதனை
இந்திய கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 5-வது வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கும் முன் விஜய் ஹசாரே (1951). சுனில் கவாஸ்கர் (1976), வெங்சர்க்கார் (1987) மற்றும் விராட் கோலி (2014) ஆகியோர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாத குறையே தெரியாமல் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி அசத்தி வருகிறது.