Categories: சினிமா

ஷங்கர் சொன்னதால் தான் மகான் படத்தில் நடிச்சேன்! பாபி சிம்ஹா ஓபன் டாக்!

Published by
பால முருகன்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ்விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர்  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மகான். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில காரணங்களால் படம் நேரடியாக அமேசான் ஓடிடி இணையதளத்தில் வெளியானது .

ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய பாராட்டை பெற்றது படம் பார்த்த பலருமே படம் அருமையாக இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றும் பாராட்டி இருந்தனர். படத்தில் விக்ரம் துருவிக்ரம் கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு பாபிசிம்ஹா நடித்த  கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்ஹா நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். பிறகு இயக்குனர் ஷங்கர் சொன்ன காரணத்தால் தான் படத்தில் நடிக்கவே சம்மதம் தெரிவித்தாராம். இந்த தகவலை நடிகர் பாபி சிம்ஹாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மகான் படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தேன்.

அன்னபூரணி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? 

எனவே, மகான் படத்தில் நான் நடிக்க முதலில் தயாராக இல்லை ஏனென்றால், படத்தில் வயதான தோற்றம் முதல் இளமையான தோற்றம் வரை இரண்டு கெட்டப்களில் நடிக்கவேண்டும். எனவே, அந்த சமயம் நான் இந்தியன் 2 படத்திற்காக கெட்டப் வைத்து இருந்தேன். எனவே மகான் படத்தில் நடிக்க நான் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து கொண்டே இருந்தேன்.

பிறகு கமல்ஹாசன் சார் இடையில் விக்ரம் படத்தில் நடிப்பதற்காக சென்றார் எனவே, அந்த சமயத்திற்குள் நான் மகான் படத்தில் நடிக்கலாம் என்று திட்டமிட்டு ஷங்கர் சார் கிட்ட அனுமதி கேட்டேன். அதற்கு ஷங்கர் சார் எதுவும் சொல்லாமல் அதுக்கு என்ன நீங்க நடிச்சிட்டு வாங்க என்று கூறினார். ஷங்கர் சார் சொன்ன காரணத்தால் தான் மகான் படத்தில் நடித்தேன்” எனவும் பாபி சிம்ஹா கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…

14 minutes ago

ஐபிஎல் எலிமினேட்டர்: இன்று மும்பை – குஜராத் அணிகள் மோதல்.! தோற்றால் வெளியேற வேண்டியதுதான்.!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…

33 minutes ago

ராமதாஸ் கடும் விமர்சனம்: கட்சி நிர்வாகிகளோடு அன்புமணி இன்று ஆலோசனை..!

சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…

2 hours ago

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.., த.வெ.க கல்வி விருது விழா.!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து…

2 hours ago

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!

வாஷிங்டன்: டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய…

2 hours ago

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!

சென்னை : மேற்கு வங்கம் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று…

3 hours ago