அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!

டிரம்ப் வரிகளை விதிப்பதில் தனது அதிகாரத்தை மீறியதாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு நாளுக்குப் பிறகு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு வந்தது.

Donald Trump - US court

வாஷிங்டன்: டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய உத்தரவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வரிவிதிப்பை நிறுத்திவைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என தடையை நீக்கியது மேல்முறையீட்டு நீதிமன்றம். இந்த நடவடிக்கை, டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் இயற்றப்பட்ட பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் டிரம்ப் நிர்வாகம் “சீர்படுத்த முடியாத தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக” தீர்ப்பிலிருந்து அவசர நிவாரணம் வேண்டுமென கோரி மனு தாக்கல் செய்தது. பின்னர், அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை, முந்தைய தீர்ப்பை அமல்படுத்துவதை நிறுத்துகிறது மற்றும் நிர்வாகம் உடனடியாக கட்டணங்களை நீக்காமல் அதன் மேல்முறையீட்டைத் தொடர அனுமதிக்கிறது என்று தீர்ப்பு அளித்தது.

மேலும், இந்த வழக்குகளில் உள்ள வாதங்களுக்கு ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும், நிர்வாகம் ஜூன் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு முன்னர், பாதிக்கப்பட்ட கட்டணங்களை 10 நாட்களுக்குள் அமல்படுத்துவதை நிறுத்துமாறு வெள்ளை மாளிகைக்கு உத்தரவிடப்பட்டது சட்ட செயல்முறை வெளிவரும் வரை இப்போது இந்த காலக்கெடு பொருந்தாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்