அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.., த.வெ.க கல்வி விருது விழா.!
இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் விழாவில் மாணவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பாராட்டும் விழா, இன்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த விழா காலை 10 மணிக்கு தொடங்கி, தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கிறார். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் கல்வி சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதில் முதல் கட்ட விழாவாக இன்று நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாட்டின் அறியலூர், இராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 88 சட்டமன்ற தொகுதிகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் கட்சி விளம்பர பதாகைகள் வைக்க வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியுள்ளார், இதன் மூலம் இந்நிகழ்ச்சி முற்றிலும் கல்வி மற்றும் மாணவர்களை மையப்படுத்தியதாக அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் நடைபெறும் இந்த பாராட்டு விழா, தமிழ்நாட்டில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை அங்கீகரிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
May 31, 2025
கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!
May 31, 2025