முக்கியச் செய்திகள்

Vijayakanth : அடக்கம் செய்ய கூட காசு இல்லை! பணமின்றி தவித்த நடிகையின் மகளுக்கு கேப்டன் செய்த பெரிய உதவி!

Published by
பால முருகன்

நடிகர் விஜயகாந்த் சாப்பாடு முதல் பண உதவி வரை யாரு கேட்டாலும் இல்லையென்று சொல்லவே மாட்டார். அவர் செய்த உதவிகளை பற்றி அவருடன் இருந்தவர்கள் பேட்டிகளில் தெரிவித்து நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், யாருக்கும் தெரியாமல் கூட கேப்டன் விஜயகாந்த்  பல உதவிகளை அதில் ஒன்று தான் தேனி குஞ்சரம்மாள் இறப்பின் அடக்கத்திற்கு பணம் அனுப்பியது. இந்த தகவல் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

விஜயகாந்த் செய்த இந்த உதவி பற்றிய தகவலை பிரபல நடிகரும் விஜயகாந்திற்கு நெருக்கமானவருமான மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு முறை விஜயகாந்த் எனக்கு காலையிலேயே ஒரு 8 மணிக்கு போன் செய்து இன்று படப்பிடிப்பு இருக்கிறதா? என்று கேட்டார்.

அதற்கு நான் இல்லை கேப்டன் இன்று படப்பிடிப்பு இல்லை என்று கூறிவிட்டேன். பிறகு தேனி குஞ்சரம்மாள் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார் நான் அதற்கு தெரியும் கேப்டன் என்று கூறினேன். பிறகு ஒரு பை நிறைய 100 ரூபாய் நோட்டுகள் கொண்ட கிட்டத்தட்ட 10-ஆயிரம் ரூபாவை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் எதற்கு கேப்டன் இவ்வளவு பணம்? என்று கேட்டேன்.

அதற்கு கேப்டன் தேனி குஞ்சரம்மாள் இறந்துவிட்டார் அவருடைய மகள் சாந்தி என்பவர் அடக்கம் எடுக்க கூட என்னிடம் பணம் இல்லை உதவி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார். நீ உடனடியாக இந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு சென்று சாந்தி யார் என்று கேட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் இந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு இரங்கலை தெரிவித்துவிட்டு வந்துவிடு என்று கூறினார்.

குறிப்பாக இந்த உதவியை செய்தது வெளியில் யாருக்கும் தெரியவே கூடாது அதனை கவனமாக பார்த்துக்கொள் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி பணத்தை தேனி குஞ்சரம்மாள் மகள் சாந்தியிடம் கொடுக்கும்போது வேறு எதுவும் உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேட்க சொல்லு என்றும் கூறி அனுப்பினார். கேப்டன் கூறியதில் மிகவும் ஆச்சரியமாக நான் பார்த்தது உதவி செய்தது வெளியே தெரியவேண்டாம் என்றது தான்.

கேப்டன் அப்படி கூறியவுடன் அந்த மாதிரி ஒரு மனிதரை நான் சினிமாவிலும் பார்க்கவில்லை, அரசியலிலும் பார்க்கவில்லை” எனவும் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஈடு இணை இல்லா தலைவர் எனவும், வாழும் கடவுள் கேப்டன் எனவும் விஜயகாந்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago