இறந்தும் வாழ்வளிக்கும் நம்ம கேப்டன் விஜயகாந்த்! புல்லரிக்க வைத்த நிகழ்வு!

Published by
பால முருகன்

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இறந்தும் வாழ்வளிக்கும் வகையில் புல்லரிக்க வைத்த நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரை தினம் தினம் நினைக்கத்தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். உயிரோடு இருந்த சமயத்தில் அவர் செய்த உதவிகளை எல்லாம் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பசிக்கு சாப்பாடு போட்டும் உதவி செய்து இருக்கிறார்.

எனவே, காலங்கள்  அழிந்தாலும் நம்ம கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் என்றுமே அழியாதவையாக இருக்கும். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட மற்றவருக்கு வாழ்வளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், விஜயகாந்துடன் ஆரம்ப காலத்தில் இருந்தே கூடவே இருந்த பிரபலம் மீசை ராஜேந்திரன்.

மீசை ராஜேந்திரன் எப்போதுமே வருடம் பிறகும் தினத்தில் எப்போதுமே கேப்டனை சந்தித்து அவரிடம் இருந்து 100 ரூபாய் வாங்குவாராம். ஏனென்றால், அந்த வருடத்தில் 100 ரூபாய் விஜயகாந்திடம் வாங்கினால் தனக்கு ராசியாக இருக்கும் என்பதால் வாங்குவாராம். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் கேப்டன் மறைந்துவிட்டார். எனவே, அவருடைய நினைவிடதிற்கு மீசை ராஜேந்திரன் புத்தாண்டு அன்று சென்றாராம்.

சென்று விஜயகாந்தின் நினைவிடத்தில் 100 ரூபாய்யை வைத்துவிட்டு விஜயகாந்தே தனக்கு கொடுத்தது என்று நினைத்துவிட்டு பையில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றாராம். வீட்டுக்கு சென்ற பிறகு மீசை ராஜேந்திரனுக்கு ஒரு போன் வந்ததாம். அந்த போனை எடுத்து பேசும்போது உங்களுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறது அதற்கான அட்வான்ஸ் தொகையை போட்டு விடுகிறேன் என ஒரு தயாரிப்பாளர் கூறினாராம்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த தயாரிப்பாளர் 10 ரூபாய் பணம் போட்டுவிட்டு படத்திற்கு மூன்று நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது கண்டிப்பாக வந்துவிடுங்கள் என்று கூறினாராம். கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் சென்று அந்த 100 ரூபாயை வைத்துவிட்டு எடுத்த நேரத்தில் தான் தனக்கு பட வாய்ப்பு வந்தது எனவும் கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் எனக்கு கோவில் என்றும் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இறந்தும் வாழ்வளிக்கும் நம்ம கேப்டன் விஜயகாந்த் என கூறி வருகிறார்கள்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago