திரைப்பிரபலங்கள்

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை! எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Published by
பால முருகன்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இதுவரை அவர் 280 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர்  முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜெயப்பிரதா அண்ணாசாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம், இ.எஸ்.ஐ. ( ESI ) பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த தொகையை தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை.

இதனையடுத்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், இது தொடர்பாக, சென்னை மாவட்டம்  எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. பின், நடிகை ஜெயப்பிரதா ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன்பின், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீடு கழக வழக்கறிஞர் கவுசிக் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியாக இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

5 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

6 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

6 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

7 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

8 hours ago