திரைப்பிரபலங்கள்

ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது..2 படமும் ஓடுனா மட்டும் தான் பார்ப்பேன்…பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்.!!

Published by
பால முருகன்

இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை போல் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்திலும் அவருக்கு வில்லனாக நடித்துவருகிறார். இந்நிலையில்,   எப்போதும் தனக்கு மனதில் படும் விஷயங்கள் அல்லது அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு மிஷ்கின் வெளிப்படையாக பதில் அளித்துவிடுவார்.

Mysskin [Image source : file image]

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மிஷ்கினிடம் தொகுப்பாளர் ஒருவர் சார் நீங்கள் லியோ படத்திலும் நடித்துள்ளீர்கள்…மாவீரன் படத்திலும் நடித்துள்ளீர்கள் உங்களுக்கு இந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதா..? என கேள்வி கேட்டார்.

Mysskin about leo maaveeran [Image source : file image]

இந்த கேள்விக்கு பதில் அளித்த மிஷ்கின் ” எனக்கு ஒரு எதிர்பார்ப்பும் கிடையவே கிடையாது. இரண்டு படங்களையும் நான் கொஞ்ச நாட்கள் கழித்து தான் பார்ப்பேன். கிட்டத்தட்ட இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியது என்றால் மட்டும் தான் பார்ப்பேன். அப்படி ஓடவில்லை என்றால் கண்டிப்பாக பார்க்கவேமாட்டேன்.

mysskin speech [Image source : file image]

இப்போது சமீபகாலமாக நான் படங்களே பார்ப்பதில்லை. ரொம்ப குறைவாக சில படங்களை மட்டும் தான் பார்ப்பேன். ஐயோ நான் இன்னும் நன்றாக நடிக்கவேண்டும் சம்பளம் அதிகமாக வாங்கவேண்டும் கடற்கரை ஓரம் வீடு வாங்கவேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை.

Mysskin about maaveeran leo [Image source : file image]

நடிப்பது மிகவும் ஜாலியாக இருக்கிறது. அதுனால் படங்களில் நடிக்கிறேன்” என கூறியுள்ளார். இவர் லியோ, மாவீரன் படங்களை பார்க்கமாட்டேன் என கூறியுள்ளது விஜய் மற்றும் சிவகார்திகேயன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

10 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

11 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago