Priya Bhavani Shankar and sjs [Image source : file image]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா இய்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுகாக செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் ராதா மோகன், நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் படத்தில் நடித்த சக நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், செய்தியாளர் ஒருவர் ‘மான்ஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானியுடன் எதற்காக நடித்தீர்கள்..? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா ‘சிம்ரன் மேடம் முக பாவனை இன்னொரு முகத்துக்கும் பொருத்தமா இருக்கும். ஷாரூக்கானுக்கும் கஜோலுக்கும் அப்படி இருக்கும்.
எனவே, அதைப்போல தான் எனக்கும் பிரியா பவானி சங்கருக்கும் எனக்கும் செட் ஆகும். எங்க ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கும். நானும் சிம்ரனும் இருந்த போட்டோ ஒன்றையும். ‘பொம்மை’ படத்தில் நானும் பிரியாவும் இருந்த போட்டோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தேன். சிம்ரன் போலவே பிரியா இருந்தாங்க அதன் காரணமாக தான் அவருடன் நடித்தேன்.
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…