top 5 actor Red Card [file image]
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய 5 நடிகர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
மேலும், நோட்டீசுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை எனும் நோக்கில் ‘ரெட் கார்டு’ விதிக்க, சங்கத்தின் பொதுக்குழுவில் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம், என் ராமசாமி தலைமையில், பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், அப்போத நடிகர் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உட்பட சில நடிகர்கள் மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான கொரோனா குமார் படத்திலிருந்து வெளியேறியதற்காக சிம்புவுக்கும், லைகா புரொடக்சன் நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத விஷால், படப்பிடிப்புக்கு அட்வான்ஸ் வாங்கி கொண்டு தயாரிப்பாளர்களிடம் தேதி கொடுக்காமல் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோருக்கு ‘ரெட் கார்டு’ விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…