கதறிய அர்ச்சனா! நடு ராத்திரி 2 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

Published by
பால முருகன்

சென்னை : உலகத்தில் பதில் கிடைக்காத கேள்விகளில் ஒன்று பேய் என்பது இருக்கா ? இல்லையா? என்பது தான். நாம் அனைவரும் இருட்டில் எதாவது சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து அது பேய் என யோசித்து நமக்கு நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு. அப்படி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அர்ச்சனா நடு இரவில் தனக்கு நடந்த அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் அர்ச்சனா பொதுவாகவே மிகவும் பயம் கொண்ட ஒருவராம். எப்படி சொல்லலாம் என்றால் வீட்டில் தூங்கும்போது கடைசியாக லைட் ஆப் செய்வதற்கு கூட மிகவும் பயப்படுவாராம். ஆப் செய்துவிட்டு வேகமாக ரூமுக்கு சென்று போர்வையை போர்த்தி தூங்குவாராம். இப்படி லைட் ஆப் செய்வதற்கே பயப்படும் அர்ச்சனாவுக்கு இரவு 2 மணிக்கு அதிர்ச்சியான திகில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சீரியலில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் இரவு நேரங்களில் படப்பிடிப்புகள் நாடாகும். அப்படி தான் ஒரு முறை இரவு நேரத்தில் படப்பிடிப்பு ஒன்றை முடித்துவிட்டு சென்னையில் இரவு 2 மணிக்கு காரில் அர்ச்சனா சென்று கொண்டு இருந்தாராம். அப்போது சாலைக்கு பக்கத்தில் யாரோ ஒருவர் நின்று கொண்டு இருந்தது போல் இருந்ததாம். இந்த நேரத்தில் யார் இங்கு நிற்கப்போகிறார் என்ற பயத்துடன் அர்ச்சனாவும் சென்றாராம்.

அப்போது தான் அர்ச்சனாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சம்பவம் ஒன்று நடந்ததாம். அர்ச்சனா பார்த்த அந்த உருவம் காரில் அவரை பின்தொடர்ந்து வந்ததாம். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா மிகவும் வேகமாக காரை ஒட்டி சென்று வீட்டில் தான் காரை நிறுத்தினாராம். வீட்டிற்கு சென்று நான் இனிமேல் இரவு படப்பிடிப்பு போகமாட்டேன். நான் பேயை பார்த்துவிட்டேன்.

பேயை பார்த்துவிட்டேன்…பேயை பார்த்துவிட்டேன்… என்று பதட்டத்தில் பேசினாராம். அப்போது அவருடைய பெற்றோர் இல்லை நீ சரியாக தூங்கவில்லை தவறாக அப்படி நினைத்து கொண்டதால் உனக்கு அப்படி தோணுகிறது. சரியாக தூங்கி எழுந்திரு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார்களாம். இந்த திகில் சம்பவத்தை பேட்டி ஒன்றில் அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.

இப்படி பயப்படும் அர்ச்சனா டிமாண்டி காலனி 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருகிறார். சீரியல்களில் நடித்து வந்த அவர் இந்த படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகம் ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

4 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

5 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

5 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

6 hours ago