sobhita dhulipala and naga chaitanya [Image source : file image ]
நாக சைதன்யாவுடனான டேட்டிங் வதந்திகள் குறித்து சோபிதா துலிபாலா இறுதியாக பேசியுள்ளார்.
நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்ததாக கடந்த ஆண்டு வதந்திகள் கிளப்பியது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், சில இணையத்தில் வைரலானதே இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக பரவும் வதந்திக்கு காரணம் என்று கூறலாம்.
இந்நிலையில், நடிகை சோபிதாவும் நடிகர் சைதன்யாவும் எந்த ஒரு நேர்காணல்களிலும் தங்கள் வதந்தியான உறவைப் பற்றி வாய் திறக்காமல் இருந்த நிலையில், நடிகை சோபிதா ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்வில் கலந்துகொண்டபோது இந்த வதந்திகளைப் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய சோபிதா ” எனக்கு சினிமா துறையில் ஆர்வம் மிகவும் அதிகம். நான் என்னுடைய கேரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அறிவு இல்லாமல் பேசுபவர்களுக்கு, நான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யாதபோதும், அது என்னுடைய தொழில் அல்லாதபோதும் விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.
மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது குறித்து பேசிய அவர் ” இந்த மாதிரி நல்ல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மணிரத்னம் சார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் நடித்தது எனக்கு மிகவும் பெரிய விஷயம்” என கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…