Dhivya Duraisamy [file image]
Dhivya Duraisamy : நடிகை திவ்யா துரைசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வேதனையாக இருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவருடைய புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவிய காரணத்தால் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததற்கு அவருக்கு பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து அவருக்கு ப்ளூ ஸ்டார் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த வெற்றிகளை எல்லாம் தொடர்ந்து அடுத்ததாக சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது திவ்யா துரைசாமி தான் சோகமாக இருந்தால் என்ன செய்வார் என்பதனை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ரொம்பவே மனது வேதனையாக இருந்தது என்றால் நான் முதலில் டாட்டூ போட தான் போவேன். அப்படி இல்லை என்றால் முடி வெட்ட செல்வேன்.
இல்லை என்றால் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் எடுக்க செல்வேன். ஏனென்றால், இப்படியெல்லாம் எதாவது செய்தால் மட்டும் தான் நாம் வேதனை பட்ட விஷயங்களில் இருந்து நமது மனநிலையை மாற்றி வெளியே வரமுடியும். அப்படி முடி வெட்டியே பிறகு எல்லாம் என்னுடைய வேதனை எல்லாம் சென்ற பிறகு ஐயோ வெட்டி விட்டோமே என்று வேதனைப்படுவேன்” எனவும் நடிகை திவ்யா துரைசாமி கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க சொல்லுறது புதுசா இருக்கு என்பது போல கூறி வருகிறார்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…