ரொம்ப வேதனையா இருந்தா இதை தான் பண்ணுவேன் -திவ்யா துரைசாமி!

Published by
பால முருகன்

Dhivya Duraisamy : நடிகை திவ்யா துரைசாமி  சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வேதனையாக இருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவருடைய புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவிய காரணத்தால் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததற்கு அவருக்கு பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து அவருக்கு ப்ளூ ஸ்டார் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.  இந்த வெற்றிகளை எல்லாம் தொடர்ந்து அடுத்ததாக சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது திவ்யா துரைசாமி தான் சோகமாக இருந்தால் என்ன செய்வார் என்பதனை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ரொம்பவே மனது வேதனையாக இருந்தது என்றால் நான் முதலில் டாட்டூ போட தான் போவேன். அப்படி இல்லை என்றால் முடி வெட்ட செல்வேன்.

இல்லை என்றால் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட்  எடுக்க செல்வேன். ஏனென்றால், இப்படியெல்லாம் எதாவது செய்தால் மட்டும் தான் நாம் வேதனை பட்ட விஷயங்களில் இருந்து நமது மனநிலையை மாற்றி வெளியே வரமுடியும். அப்படி முடி வெட்டியே பிறகு எல்லாம் என்னுடைய வேதனை எல்லாம் சென்ற பிறகு ஐயோ வெட்டி விட்டோமே என்று வேதனைப்படுவேன்” எனவும் நடிகை திவ்யா துரைசாமி கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க சொல்லுறது புதுசா இருக்கு என்பது போல கூறி வருகிறார்கள்.

Recent Posts

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

28 minutes ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

52 minutes ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

1 hour ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

2 hours ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

15 hours ago