அரண்மனை 4 எடுத்தது அந்த பொண்ணுக்காக தான்? சுந்தர் சியே சொல்லிட்டாரு பாருங்க!

Published by
பால முருகன்

Aranmanai 4  : அரண்மனை 4 திரைப்படத்தை ஒரு பெண்ணுக்காக எடுத்தேன் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 மற்றும் காபி வித் காதல் படங்களின் தோல்வியை தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா இன்னும் பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்து உள்ளார்.  இந்த திரைப்படத்திற்கான டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை சற்று அதிகமாக்கி இருந்தது. ஒரு சிலருக்கு டிரைலர் அந்த அளவிற்கு பிடிக்கவில்லை என்று கூட சொல்லலாம். கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு முறை சுந்தர் சி இரண்டு படங்களை இயக்கவேண்டும் என்று எந்த படத்தை இயக்கலாம் என்று குழப்பத்துடன் விமானத்தில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது இரு பெண் சுந்தர் சியை பார்த்து எப்போது அரண்மனை எடுப்பீர்கள் என்று கேட்டதாம்.

அதற்கு முதலில் சுந்தர் சி காத்திருங்கள் என்பது போல கூறிவிட்டாராம். அதன் பிறகு மற்றோரு பெண் சுந்தர் சியை பார்த்து நான் அரண்மனை படத்தோட பெரிய ரசிகை எப்போது அரண்மனை அடுத்த பாகம் வரும் என்று கேட்டாராம். அந்த பெண் கேட்டவுடன் சுந்தர் சி குழப்பத்தில் இருந்து மீண்டு அரண்மனை 4 படத்தை இயக்க முடிவு செய்தாராம்.  அரண்மனை 4 படத்தை இயக்கி முடித்து தற்போது ரெடியாகியுள்ள நிலையில், இந்த படத்தை அந்த பெண்ணுக்காக தான் எடுத்துள்ளேன் எனவும் சுந்தர் சி பொது மேடை ஒன்றிலும் தெரிவித்து இருக்கிறார்.

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

5 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

5 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

6 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

7 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

8 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

8 hours ago