ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனுக்கு இவ்ளோ பன்னிருக்காங்களா?

Published by
கெளதம்

ஜெயிலர் 2 : இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் நெல்சன் அறிவித்தார்.

இந்நிலையில், ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஹுக்கும்’ பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து, ஜெயிலர் 2ம் பாகத்திற்கு அந்த பெயரைத்தான் வைக்க படக்குழு  திட்டமிட்டுள்ளனராம். தற்பொழுது, ஜெயிலர் 2 படத்தின் திரைக்கதை பணியை இயக்குநர் நெல்சன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கானப் பணிகளை தொடங்கியுள்ள அவர், கூலி படத்திற்கு பிறகு ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஒரு படத்திற்கு ரூ.210 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்திற்கு அதை விட அதிகமாக கேட்டுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஒரு தகவலின் படி, ரூ.250 கோடி கேட்டிருப்பார் என சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம், இருக்க இயக்குனர் நெல்சனுக்கு ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு, கேட்டதை விட சம்பளத்தை கூட்டி கொடுப்பதாக சொல்லப்பட்டது.

அதன்படி, ஜெயிலர் படமும் வெற்றியை பெற்று வசூலில் மூன்று மடங்கு லாபத்தை பெற்று கொடுத்ததன் அடிப்படையில், அவருக்கு சம்பளம் ப்ளஸ் Porsche கார் கிப்டாக அளிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல், சென்னையில் அவருக்கென ஒரு தனி ஆஃபீஸ் அமைத்து கொடுத்திருப்பதாக சொல்லபடுகிறது. இப்போது, இரண்டாம் பாகத்திற்கும் காம்ப்ரமைஸ் பேசியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

22 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago