Categories: சினிமா

‘ஹே சினாமிகா’ திரைப்படத்திற்காக தமிழில் முதல் முறையாக பாடிய துல்கர் சல்மான்..!

Published by
Edison

மலையாள திரைப்படங்களில் அவ்வப்போது பாடல்களும் பாடிய மோலிவுட்டின் இளம் ஹீரோவான துல்கர் சல்மான், தற்போது கோலிவுட்டிலும் பின்னணி பாடகராக மாறியுள்ளார். 

தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் வலம் வருகிறார்.பிருந்தா மாஸ்டர், முதல் முறையாக இயக்கிவரும் ‘ஹே சினாமிகா’ என்ற தமிழ் திரைப்படத்தில் துல்கர் சல்மான்,காஜல் அகர்வால், அதிதி ராவ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் ஒரு பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார்.துல்கர் தமிழில் பாடும் முதல் பாடல் இதுவே ஆகும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ள முதல் படம் ‘ஹே சினாமிகா’ என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்,பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார்.கார்க்கியின் வரிகளில் துல்கர் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

2013 இல் வெளியான மலையாள திரைப்படமான ‘ஏபிசிடி’ மூலம் துல்கர் பின்னணி பாடகராகவும் அறிமுகமானார்.பின்னர்,மலையாளத்தில் வெளியான சார்லி படத்தில் சுந்தரி பெண்ணை பாடலை பாடினார்.இப்பாடலானது தமிழ்,மலையாளம்,தெலுங்கு போன்ற அனைத்து சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.துல்கர் சல்மான்,இதுவரை 8 பாடல்களை மலையாளத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தமிழில் முதல் முறையாக பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் துல்கர் பாடல் பாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

 

Published by
Edison

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago