சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில், பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் தேனி என்ஆர்டி நகரில் உள்ள தனது வீட்டிற்கு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் வந்துள்ளார். இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாரதிராஜாவின் சளி, ரத்த மாதிரிகளை தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதாரத்துறையினர் சேகரித்து, தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. இருப்பினும், பாரதிராஜாவை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில், பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், இயக்குநர் பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…