பிரபல இயக்குனர் பாரதிராஜா வீட்டில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்!

Published by
லீனா

சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில், பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.  இவர் தேனி என்ஆர்டி நகரில் உள்ள தனது வீட்டிற்கு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் வந்துள்ளார். இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாரதிராஜாவின் சளி, ரத்த மாதிரிகளை தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதாரத்துறையினர் சேகரித்து, தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. இருப்பினும், பாரதிராஜாவை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில், பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

மேலும், தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், இயக்குநர் பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago