என்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியும்….சர்ச்சைகளுக்கு தனுஷ் வைத்த முற்றுப்புள்ளி!!

Published by
பால முருகன்

தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக பதில் அளித்துவிடுவார்கள். அப்படி தான் நடிகர் தனுஷ் தற்போது தன்னை பற்றிய பரவிய விமர்சனங்கள், வதந்திகள் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூசகமாக பேசியுள்ளார்.

தனுஷ் பற்றி பாடகி சுசித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் தனுஷ் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது அதைப்போல, தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது பற்றியும் தனுஷ் புதிதாக வீடு ஒன்றையும் போயஸ் கார்டன் பகுதியில் கட்டிய வீடு பற்றியும் பல வதந்தி தகவல்கள் பரவியது.

இதனை பற்றி எல்லாம் கவலை படாதா தனுஷ் தன்னுடைய வேளையில் மட்டும் கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார். அவருடைய 50-வது படமான ராயன் வரும் ஜூலை 26-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தனுஷ் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.

Dhanush [file image]
ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதாவது ” என்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றாக தெரியும். அதைப்போல என்னுடைய ரசிகர்களுக்கு என்னை பற்றி நன்றாகவே தெரியும். எனக்கு பல அவமானங்கள் நடந்தாலும் இன்னுமும் நான் இப்படி உங்களுடைய முன்னாள் வந்து நிற்பதற்கு காரணமே நீங்கள் தான்” என்று கூறினார்.

மேலும் பேசிய தனுஷ் “நான் யாருடைய ரசிகன் என்பது உங்களுக்கே தெரியும். என்னுடைய 16 வயதின் நான் ஒருமுறை போயஸ் கார்டனுக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் ரஜினி சாருடைய வீட்டை பார்த்தேன். பிறகு அங்கிருந்த போலீசாரிடம் கெஞ்சிவீட்டிற்குள் பார்க்க ஆசைப்பட்டேன், ஆனால் பார்க்க முடியவில்லை. பிறகு அருகில் கூட்டமாக இருந்தது அதனை பார்த்துவிட்டு யார் வீடு என்று என்னுடன் வந்தவரிடம் கேட்டேன்.

Dhanush [file image]
அவர் என்னிடம் இது தான் ஜெயலலிதா அவர்களுடைய வீடு என்று சொன்னார். எனவே, அப்போது என்னுடைய மனதில் போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவின் ஆசைக்கு, தனுஷ் கொடுத்த கிஃப்ட் தான் போயஸ் கார்டனில் நான் கட்டிய அந்த புதிய வீடு” எனவும் வீடு குறித்து பரவிய புரளிக்கும் தனுஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago