இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராக மாறிய பிறகு அவரது சம்பளம் ஒரு நாளைக்கு 10 எனும் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.
மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா எனும் என்றென்றும் ரசிகர்கள் மனதில் பேசப்படும் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்தமாக எடுத்த சில படங்கள் படுதோல்வி அடைந்ததால் பெரும் கடன்சுமைக்கு ஆளானார்.
அதன் பின்னர் வெவ்வேறு இயக்குனர்கள் படத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் கெளதம் மேனனை ரசிகர்கள் வெகுவாக கொண்டாட ஆரம்பித்தனர். அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது.
அதிலும், மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் அவரது காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அவரது சம்பளத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சர்யத்தில் இருக்கிறதாம்.
ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். தயாரிப்பாளர்களும் அதனை கொடுக்க தயாராக தான் இருக்கிறார்கள் போலும். ஏனென்றால், அவருடைய நடிப்பும் அவரது இயக்கம் போல தனித்துவமாக இருக்கிறது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…