அவரு தான் முதல் க்ரஷ்…அதை மட்டும் மறக்க முடியல…ரீமா சென் உளறிய ரகசியம்!

Published by
பால முருகன்

ரீமா சென் : தமிழ் சினிமாவில் மின்னலே, தூள்,செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், ராஜபாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரீமா சென். இவர் நடித்த படங்கள் எல்லாம் தமிழில் கொஞ்ச படம் தான் ஆனால், இவர் நடித்த அந்த படங்களில் இவருடைய நடிப்பு எல்லாம் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் இருக்கும் என்றேசொல்லலாம். வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் எல்லாம் அந்த மாதிரி ஒரு நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

நன்றாக நடிக்க தெரிந்த இந்த நடிகை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகி விட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு சிவ கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமணவாழ்கையில் இணைத்தார். தமிழில் அவர் நடித்த கடைசி படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படத்திற்கு பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

reema sen [file image]
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகை ரீமா சென் தன்னுடைய முதல் க்ரஷ் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டு இருந்த சமயத்தில் முதல் காதல்  ஒரு பையனிடம் ஏற்பட்டது. அந்த பையன் மிகவும் அழகாக இருந்த காரணத்தால் அவரை எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.

இன்னும் வெளிப்படையாகவே சொல்லப்போனால் அப்படி நியாயமாக இருப்பவர்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. என்ன இப்படி இருக்கிறீர்கள் என்று யோசிப்பேன் . ஆனால், அவரை எனக்கு ரொம்பவே பிடித்தது. ஒரு முறை ஒரு விழாவின் போது நான் அவரை பார்த்தேன் சிவப்பு கலர் சட்டை போட்டு இருந்தார். அதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு அழகாக இருந்தார்.

அவருடைய முகம் எனக்கு இப்போது நினைவில் இல்லை ஆனால் அவருடைய தோற்றத்தை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது” எனவும் நடிகை ரீமா சென் தெரிவித்துள்ளர். மேலும். சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் ரீமா சென் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago