Categories: சினிமா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்க்க போறேன்! ஹாலிவுட் நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்!

Published by
பால முருகன்

கார்த்திக்  சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த திரைப்படத்தில் நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, அரவிந்த் ஆகாஷ், பாவா செல்லதுரை உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படத்தை மக்கள் பலரும் பாராட்டியதோடு சினிமா இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர், நெல்சன், லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட இயக்குனர்களும் பாராட்டி இருந்தார்கள்.

ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

அந்த அளவிற்கு அருமையான படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்து இருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான  க்ளின்ட் ஈஸ்ட்வுட் குறித்த காட்சிகள் மற்றும் அவருடைய புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். எனவே, படத்தில் அவருடைய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்தை பாருங்கள் என்று ஒருவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து கேட்டுக்கொண்டார்.

எனவே, அந்த பதிவிற்கு க்ளின்ட் ஈஸ்ட்வுட்  தரப்பில் இருந்து பதில் வந்து இருக்கிறது. அதில் ” ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் குறித்து  க்ளின்ட் ஈஸ்ட்வுட் கேள்விப்பட்டார். அவர் தற்போது  ( Juror 2) படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். நடித்து முடித்த பிறகு அந்த திரைப்படத்தை பார்ப்பார்” என கூறப்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை க்ளின்ட் ஈஸ்ட்வுட் பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Clint Eastwood Official [file image]
தமிழில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பெரிய நடிகர் இந்த படத்தை பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. இதற்கு எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

1 hour ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

3 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

4 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

4 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

4 hours ago