GOAT [file image]
கோட் : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதியை தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், அந்த தேதியில் தான் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்ட பணிகள் ஒரு பக்கம் மும்மரமாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மற்றோரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி வருகிறது. படத்திற்கான டிரைலரும் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், படத்தின் முதல் காப்பியை நடிகர் விஜய் பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். படத்தினை பார்த்துவிட்டு நடிகர் விஜய் முதலில் வெங்கட் பிரபுவை கட்டிப்பிடித்தாராம். கட்டிபிடித்துவிட்டு “கலக்கிட்ட வெங்கட் பிரபு…நான் அவசரப்பட்டு சினிமாவில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டேன். இன்னொரு படம் உன்னுடன் பணியாற்றி இருக்கலாம்” என விஜய் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் கோட் படத்தை பார்த்துவிட்டு இப்படி கூறியுள்ளது இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளை இன்னுமே அதிகப்படுத்தியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியான பிறகு இன்னுமே படத்திற்கு எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய் இந்த திரைப்படத்தில் முடித்த கையோடு அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக விஜய் அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…