Categories: சினிமா

ராஷ்மிகா மந்தனாவை விட ஸ்ரீவல்லி கேரக்டரில் நான் கலக்கியிருப்பேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

Published by
கெளதம்

காக்கா முட்டை படத்தின் மூலம் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பல பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது, சமீபத்திய படமான ‘ஃபர்ஹானா’ திரைப்பட ப்ரோமோஷன் பணியின் போது, தெலுங்கு சினிமா பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்தார்.

Aishwarya Rajesh [Image source : twitter/ @Lets OTT]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரகொண்டாவுடன் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்ற படத்தில் நடித்தாலும், தெலுங்கை விட தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், “எனக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரி பிடிக்கும், ஆனால் மீண்டும் ஒரு நல்ல தெலுங்குப் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

Aishwarya Rajesh
[Image source : file image ]

நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன், ஆனால் அது எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை. மேலும் அவர் பேசுகையில், அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் நடித்திருபேன் என்று பகிர்ந்து கொண்டார்.

Pushpa [Image source : twitter/ @Lets OTT]

எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், நான் உடனே ஓகே சொல்லிருப்பேபின்.  ராஷ்மிகா ஸ்ரீவல்லியாக நன்றாக நடித்தார், ஆனால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்துவேன் என்று உணர்கிறேன், நம்புகிறேன்” என்று ஃபர்ஹானா பட ப்ரோமோஷன் பணியின் போது பகிர்ந்து கொண்டார்.

Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 minutes ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

38 minutes ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

41 minutes ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

3 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

3 hours ago