இந்திய 2 வேற லெவல்…இந்தியன் 3 அதுக்கும் மேல..எதிர்பார்ப்பை எகிற வைத்த பாபி சிம்ஹா!!

Published by
பால முருகன்

இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளார்கள்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜீலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ” இந்தியன் 2 திரைப்படம் அருமையாக வந்து இருக்கிறது. நாம் இப்படி தான் இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு வைத்து இருப்போம் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு படம் இருக்கும். படம் முடியும் போது கண்டிப்பாக கண்கலங்கி அழுவீர்கள்.

இரண்டாவது பாகமே இப்படி இருக்கிறது என்று நான் உறுதியாக சொல்கிறேன் என்றால் அத்துடன் மூன்றாவது பாகம் வேற வேற லெவலில் இருக்கும். கண்டிப்பாக நீங்கள் படத்தை பார்க்க தானே போகிறீர்கள். ஷங்கர் சார் எடுத்த கதைகளமாக இருக்கட்டும் அவருடைய மேக்கிங் ஆக இருக்கட்டும் எல்லாமே வேற லெவலில் இருக்கும்” எனவும் பாபி சிம்ஹா கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

30 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

35 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

58 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago